பிரபல நடிகை மைனா நந்தினியின் இரண்டாவது கணவராக வர போகிறவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! காரணம் இதுதான்

சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நந்தினி. பின்னர் பல்வேறு தொடர்கள் மற்றும் சில படங்களிலும் நடித்தார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே

கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்துவிட்டார்.
குடும்பத் தகராறில் மனம் உடைந்து உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நந்தினி கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்து உள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் மணக்கவுள்ளதாகவும் இரு மாதங்களுக்கு முன்னர் மைனா நந்தினி தெரிவித்தார். நந்தியினியின் காதலரான இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நாயகி சீரியலில் கோபி என்ற கதாப்பாத்திரம் மூலம் வில்லனாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த சீரியலில் கோபி தன் அண்ணனுக்கு துரோகம் செய்வது போல் அவர் நடித்துள்ளார். அந்த சீரியலில் அண்ணனின் மனைவியை கோபிக்கு சுத்தமாக பிடிக்காது அகையால் அவர் சுகாசினி என்ற பெணுடன் சேர்ந்து தன் அண்ணனிடமிருந்து தன் அண்ணியை பிரித்து அந்த சுகாசினி என்ற பெண்னை திருமணம் செய்ய ஆசை தோள்வியடைந்துள்ளது.

ஆகையால் கோபி தன் அண்ணிக்கு தெரியாமலே அவரின் கர்பத்தை கலைக்க மாத்திரை தந்து கர்பத்தை கலைக்கிறார். அதை அவர் அம்மா மேல் பழிவருவது போல் அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இப்படி செய்த அவரை மக்கள் கழுவி ஊற்றுகிறார்கள். அதை நீங்களே பாருங்களேன்.

இப்படி மிக மோசமானவராகவும், இரக்கமற்ற கல்நெஞ்சக்காரராகவும் நடிக்கும் கோபியை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். எது எப்படியோ, ரசிகர்களிடம் திட்டு வாங்குவது அவர் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி தான் என்பதை மறுக்க முடியாது.