பெண்ணை கற்பழிக்க முயன்று தோல்வியடைந்ததால் விரக்தியில் இளைஞர் செய்த கொடூர செயல்..!! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

பீஹார் மாநிலத்தில் பாட்னாவைச் சேர்ந்த அந்தப் பெண் தீக்காயம் அடைந்த தனது மகனை கடந்த மாதம் 16-ஆம் தேதி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஒரு நபர் மருத்துவமனையின் தனியான ஒரு இடத்தில் அந்தப் பெண்ணை மறித்து அந்தப் பெண்ணின் பலத்த எதிர்ப்புக்கும், போராட்டத்துக்கும் இடையே வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறாது.

ஆனால் அத்துடன் விடாத அந்தக் கொடூரன் அந்தப் பெண் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டதால் மன அழுத்ததுக்கும், ஆத்திரத்துக்கும் ஆளாகி அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் கூர்மையான பொருளை செலுத்தி தாக்கிய அவன் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு பெண் ஓடி வந்ததையடுத்து அங்கிருந்து தப்பியோடினான்.

இதனைத் தொடர்ந்து அவசரசிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தப் பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,

அவரது பிறப்புறுப்பில் பல்வேறு தையல்கள் போடாப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த நபரை தேடி வருகின்றனர்.