முதலில் சிறுமி! பிறகு பாட்டி! காமக் கொடூரன் சந்தோஷ் குமார் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்!

கோவையில் சிறுமியை கொலை செய்த சந்தோஷ் குமார் அதனை பார்த்த அவனது பாட்டியையும் கொலை செய்துவிட்டதாக திடுக் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கடந்த வாரம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. 6 வயது சிறுமியை சிறிதும் இரக்கமில்லாமல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து ஒருகாமக் கொடூரன் கொலை செய்திருந்தான். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுமியின் வீட்டருகே வசித்த சந்தோஷ் குமார் என்கிற 38 வயதான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை கடத்திச் சென்ற இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மூன்றாவது முறை பலாத்காரம் செய்ய முயன்றபோது சிறுமி சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் சந்தோஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி மாயமான அன்று இரவுதான் சந்தோஷ்குமாரின் பாட்டி இழந்துள்ளார். இதனால் சந்தோஷ்குமார் வீட்டிற்குள் மட்டும் சென்ற சிறுமியை யாரும் தேடவில்லை. இந்த நிலையில் சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் வைத்து பலாத்காரம் செய்த போது சந்தோஷ்குமாரை அவரது பாட்டி பார்த்ததாகவும் அதன் காரணமாக பாட்டியை சந்தோஷ்குமார் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்றும் ஒரு புகார் எழுந்துள்ளது.

ஏனென்றால் ஏனென்றால் அன்று காலைதான் பாட்டி பலரும். அவர் நன்றாகவே இருந்துள்ளார். ஆனால் திடீரென அன்று இரவு சந்தோஷ்குமாரின் பாட்டி இறந்தது தற்போது பிரச்சினையாகி உள்ளது. எனவே சிறுமியை கொலை செய்த சந்தோஷ்குமார் அவனது பாட்டியையும் கொலை செய்துள்ளனர் என விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் சிறுமியைப் சிறுமியை தனது மகன் எதுவும் செய்யவில்லை என்றும் அவனது பாட்டியும் உடல்நலக்குறைவால் தான் இறந்துள்ளார் என்றும் சந்தோஷ்குமாரின் தந்தை வக்காலத்திற்கு வந்துள்ளார். என்னது இது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.