யார் இனி அலங்கரித்து அழகு பார்ப்பார்…!! கேரளாவில் அரங்கேறிய நெஞ்சை உருக்கும் சம்பவம்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி 28 வயதான ராகுல் மற்றும் 24 வயதான சவுமியா. 2 வயதில் ஒரு பெண் பிள்ளைக்கு பெற்றோரான இவர்கள் உறவினரின் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு குடியிருப்பில் இருந்து சொந்த வாகனத்தில் கிளம்பியுள்ளனர். இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் வைத்து

பகல் 11 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று இவர்களது வாகனம் மீது பலமாக மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். இவர்களின் காரின் முன்பகுதி இந்த விபத்தில் மொத்தமாக சிதைந்துள்ளது. இந்த நிலையில் இரவு 8 மணியளவில் சடலங்களை உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் குடியிருப்புக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது உறவினர்கள் வாய்விட்டு கதறியது அப்பகுதி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. குடியிருப்பில் நடந்தேறுவது எதையும் அறியாத அவர்களது 2 வயது குழந்தையை காண்பித்து உறவினர் ஒருவர், இனி இதற்கு யார் பாலூட்டுவார், யார் இனி உணவு ஊட்டுவார், யார் இனி அலங்கரித்து அழகு பார்ப்பார் என கதறியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.