விஷம் குடித்து டிக் டாக் வீடியோ! வெளிநாட்டு கணவனுக்கு அனுப்பிய மனைவி! பிறகு நேர்ந்த விபரீதம்!

அரியலூர் அருகே குழந்தைகளை பார்க்காமல் சதா டிக் டாக்கில் மூழ்கி கிடந்த இளம்பெண்ணை கணவன் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டதுடன் அதையும் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ள சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சியளிக்கிறது. செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 24) பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு இருவருக்கும் திருமணமாகி ,  மோனிஷா,அனீஷ் என இரு குழந்தைகள்  உள்ளனர். பழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதா பொழுது போக்கிற்க்கக டிக்-டாக் உபயோகிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அனிதா அதிலேயே சதா மூழ்கியதால், குழந்தைகளை சரியாக கவனிக்காமல், டிக்-டாக்கில் வித விதமாக அலங்காரம் செய்துப்கொண்டு ஆடிபாடி, நடித்த வீடியோக்களை பதிவு செய்து லைக்குகாலை குவித்துள்ளார். அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில் பழனிவேல் மனைவியை போனில் கண்டித்தாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, பூச்சி மருந்தை குடித்து அதனையும்  தனது டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மயக்கமடைந்த அனிதா  அக்கம்பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட

அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.