திருச்சியை சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ் (24). மென்பொறியாளரான இவர் சென்னை வந்து அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். முதல் நாளாக நேற்றுமுன்தினம் வேலைக்கு வந்த அவர், இரவில் அந்த நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். 3-வது மாடியில் வேலை செய்யும் அவர், 8-வது மாடிக்கு சென்றது ஏன் என சந்தேகம் எழுந்தது. எனவே அவர் கீழே குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் டேனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அல்லது தவறி விழுந்தாரா? எனவும் விசாரித்தனர். இது குறித்து அவர் பெற்றோரிடமும் விசாரிக்கப்பட்டது. அப்போது டேனிதா மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர். பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளதாக கூறி, அது தொடர்பான புகைப்படங்களை பெற்றோர் காட்டினர். மேலும் டேனிதா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புவதால்

எங்கு சென்றாலும் லிப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இரவு பணி முடிந்த பிறகு டேனிதா நிறுவன கட்டிடத்தின்
மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறி இறங்கியதும், இதில் அவர் நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து பலியானதும் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
