உல்லாசம்! வீடியோ! பிளாக் மெயில்! திருமணமான பெண்ணுக்கு உறவுக்கார இளைஞனால் ஏற்பட்ட விபரீதம்!

கடந்த மார்ச் மாதம் வீட்டிற்க்கு வந்த உறவினருக்கு காபிப்போட்டு கொடுக்க சென்ற பென்ணின் , பின்னாலேயே சென்று அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கேடுக்க முயன்ற நிலையில் அந்த பெண் தொடர்ந்து தன்னை த்ற்காத்துக் கொள்ள போராடியுள்ளார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கையில் காயப்படுத்திய அவன், மேலும் குத்திக்  கிழித்துவிடுவதாகக் கூறி அந்தப் பெண்ணை கத்தி முனையில் தன் ஆசைக்கு இணங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமூகத்துக்கு அஞ்சி அந்தப் பெண் தனக்கு நேர்ந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அவன், நடந்ததை தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்திருப்பதாகவும், சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டி 2 லட்சம் ரூபாய் கேட்டு கரந்துள்ளார் . இதையடுத்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதும் தான் சீரழிக்கப்பட்டதை மறைத்ததால், பணம் பறித்தல் தாக்குதல் உள்ளிட்ட சாதாரணப் பிரிவுகளில் கைது செய்ததால் அந்த நபர் எளிதில் ஜாமீனில் வந்துவிட்டான்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் நடு இரவில் பினாயிலைக் குடித்த பெண் தனது கையை கத்தியாலும் அறுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை அடுத்து அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் பெண் போலீசாரிடம் தனக்கு நேர்ந்தது அனைத்தையும் அந்தப் பெண் தெரிவித்ததையடுத்து கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான அந்த நபரை தேடி வருகின்றனர்.