தொழிலதிபராக திகழும் நடிகர் சூர்யா…. அவருக்கு இப்படி ஒரு தொழிலா?…. லாபம் மட்டுமே பல கோடி வருதாம்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தேசிய விருதை தட்டி தூக்கியது. இவர் தொடர்ந்து நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் 42வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் நாயகி உட்பட இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராகவும் சிறந்து விளங்கி வருகின்றார். இது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதாவது மும்பையில் ஒரு முக்கிய தொழிலில் சூர்யா 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மற்றொரு தொழில் குறித்த செய்தியும் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை, மதுரை, திருச்சி,மும்பை மற்றும் பெங்களூரு என முக்கிய ஊர்களின் விமான நிலையத்தில் பார்க்கிங் காண்ட்ராக்டை நடிகர் சூர்யா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக பல கோடி ரூபாய் லாபம் வரை சூர்யாவிற்கு கிடைப்பதாக இணையத்தில் தகவல் தீயாய் பரவி வருகிறது.