குழந்தைக்காக 2வது திருமணம் செய்யும் பிரபல நடிகை?…. என் கணவர் இதை தான் சொல்வார்…. நடிகை ஓபன் டாக்….!!!!

சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் மேகனா ராஜ். இவர் பிரபல நடிகையாக திகழ்ந்த பிரமிளா ஜோசய் என்பவரின் மகள். இவர் கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 மற்றும் நந்தா நந்திதா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் கன்னட சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார். அதன் பிறகு ஒரு சில மாதங்களிலேயே இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு வருகின்றார் மேக்னா.

இந்நிலையில் நடிகை மேக்னா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக மேக்னா கூறுகையில்,கணவர் இறந்த பிறகு குழந்தையை வளர்ப்பது மற்றும் அவன் எதிர்காலத்தில் பற்றி நான் சிந்தித்து வருகிறேன். ஒரு சிலர் இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறார்கள்.ஒரு சிலர் திருமணம் வேண்டாம் இந்த குழந்தையை கவனித்துக் கொள் என்று கூறுகிறார்கள்.

நான் எதைக் கேட்பது? நான் அந்தக் கேள்வியை என்னிடம் இன்னும் கேட்கவில்லை. என் கணவர் எப்போதும் உலகைப் பற்றி கவலைப்படாதே உன் மனது என்ன சொல்கிறதோ அதை செய் என்று கூறுவார். இந்த தருணத்தை வாழ்ந்து விட வேண்டும் என்றும் கூறுவார். அதனால் நாளைப் பற்றி நான் யோசிக்கவில்லை. இன்னொரு திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.