தனது நிறுவனத்தின் நைட் கிரீம் விளம்பரத்துக்காக, உச்சக்கட்ட கவர்ச்சியில் தாராளம் காட்டிய நயன்தாரா

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர். முதலில் மலையாள படம் ஒன்றில் அறிமுகமான அவர், அதன்பிறகு ஐயா படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில், சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் காட்சி மூலம், ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, நம்பர் ஒன் நாயகியாக மாறினார்.நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட அவர்கள், சமீபத்தில் மலேசியாவில் குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடினர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் வைரலானது. திருமணத்துக்கு பிறகும், நயன்தாரா இன்னும் பிஸியான நடிகையாகவே இருந்து வருகிறார். சமீபத்தில், ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.இந்நிலையில் அழகு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார் நயன்தாரா. அங்கு பெண்களுக்கான அழகுசாதன பொருட்கள் விற்னை செய்யப்படுகின்றன. 9ஸ்கின் என்ற பெயரில் Rejuvenate என்ற நைட் கிரீம் விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அழகு கொஞ்சும் மாடர்ன் டிரஸ்சில், கடற்கரையில் நைட் கிரீம் கையில் வைத்தபடி இந்த விளம்பர காட்சியில் நடித்திருக்கிறார். வழக்கமாக, பாடல் காட்சிகளில் மட்டுமே அதிகமாக காட்சியளிக்கும் நயன்தாரா, தனது நிறுவனத்தின் விற்பனை பொருளை விளம்பரப்படுத்தும் வகையில், இந்த காட்சியில் நடித்திருப்பது வைரலாகி வருகிறது.