திருமணம் முடிந்த கையோடு…. ரவீந்தர் – மகாலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்….. இன்ஸ்ட்டாவில் அவரே போட்ட போஸ்ட்….!!!!

பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏனென்றால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் நடந்திருப்பது உண்மை இல்லையா அல்லது ஏதாவது சூட்டிங்கா என்று நம்புவதற்கு சில நாட்கள் ஆகிவிட்டது.

அதன் பிறகு அதிகாரபூர்வமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை.

இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார். இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravindar Chandrasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravindarchandrasekaran)

இதனிடையே மகாலட்சுமி தொகுபாலினியாக இருந்து தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணம் முடிந்ததும் அனைவருக்கும் நடக்கும் ஒரு சடங்கு இவர்களுக்கும் நடந்துள்ளது.அதாவது தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடக்க அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.