“வாங்கடா என் செல்லங்களே”….. மகன்களை கட்டித் தழுவிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் சமீபத்தில் பரஸ்பரம் பிரிந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருந்தாலும் அவர்களின் மகன்கள் தாய் தந்தை இருவருடனும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள தி கிரே மேன் படத்தின் நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் தன் மகன்கள் லிங்கா மற்றும் யாத்திரை ஆகியோருடன் தனுஷ் பங்கேற்றார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.இந்நிலையில் அந்த பணிகள் முடிந்து தனுஷ் இந்தியாவிற்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து தனது தாயை ஐஸ்வர்யாவை சந்திக்க மகன்கள் இருவரும் சென்று உள்ளனர். அவர்களை கண்ட ஐஸ்வர்யா கட்டி அணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.

நீண்ட தூர பயணத்திற்கு பிறகு வீடு திரும்பும் குழந்தைகளை ஒரு தாய் அரவணைக்கும் வழக்கமான அன்பு தான் என்றாலும் பிரிந்த கணவருடன் வெளிநாடு சென்று மீண்டும் தன்னிடம் வரும் குழந்தைகளை உச்சி முகர்ந்து வரவேற்கும் தாய் ஒரு பிரபலம் என்பதாலும் கடந்த இரண்டு நாட்களாக உலகமே கவனித்த குழந்தைகள் என்பதால் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து, சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே என பதிவிட்டுள்ளார்.