அரக்க பறக்க லேட்டாக ஓடி வந்த மேக்கப் அஸிஸ்டெண்ட் – வெகுநேரம் காத்திருந்த அஜீத் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர் முற்றிலும் வித்யாசமானவர். எந்த இடத்திலும் தான் மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்பதற்கான எந்த அடையாளத்தையும் காட்டிக்கொள்ள மாட்டார். பந்தா இருக்காது. கோவிலுக்கு சென்றால் கூட வரிசையில் நின்றுதான் சுவாமி தரிசனம் செய்வார். சினிமாத்தனம் எதுவும் தன்னிடம் வந்துவிடாமல், மிக ஜாக்கிரதையாக இருக்கிறார் என்றே சொல்லலாம். அல்டிமேட் ஸ்டார், தல என ரசிகர்கள் தந்த புகழ் பட்டங்களை எல்லாம் நிராகரித்தவர்.அஜீத்குமார் குறித்து, ஒரு துணை நடிகர் சொன்ன சம்பவம் இது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்க வேண்டிய நாங்கள் எல்லோரும் மேக்கப் போட்டு தயாராகி விட்டோம். ஆனால், அஜீத் குமார் மட்டும் தயாராகவில்லை. ஏனென்றால், அவருக்கு மேக்கப் சாதனங்கள் வந்து சேரவில்லை. அதற்காக அஜீத் குமார் காத்திருந்த நிலையில், அந்த மேக்கப் அஸிஸ்டெண்ட் பையன் அவசர அவசரமாக, தோளில் பேக்கை மாட்டியபடி ஓடி வந்தார். அவருக்கு வியர்த்துக்கொட்டியது. சார், சார் ரெண்டு பஸ் மாத்தி வந்தேன் சார், பஸ்சில் பயங்கர கூட்டம், அதனால் லேட் ஆகி விட்டது என, அழாத குறையாக சொன்னார்.அதைக்கேட்ட அஜீத்குமார், பஸ்சுல வந்தியா, ஏன் உன்னிடம் பைக் எதுவும் இல்லையா என கேட்க, அவர் இல்லை என்றார். அடுத்த சில மணி நேரத்தில், அங்கு புத்தம் புதிய பைக், ஷோருமில் இருந்து வரவழைக்கப்பட்டது. அந்த மேக்கப் அஸிஸ்டெண்டை அழைத்த அஜீத்குமார், பைக் சாவியை கொடுத்தார். இனிமேல், பைக்குல வந்துட்டு போ. லேட்டா வராதே என்றார். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயற்சித்த அந்த பையனை, இதெல்லாம், எனக்கு பிடிக்காது என முதுகில் தட்டி அனுப்பினார், என்று தெரிவித்துள்ளார்.