அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?…. சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமியின் புதிய வீடு…. திறப்பு விழாவுக்கு சென்ற முக்கிய பிரபலம்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்த இன்று சினிமாவில் கலக்கி கொண்டு இருப்பவர்கள் ஏராளம். விஜய் டிவியில் பங்கேற்றதன் மூலம் பலரின் வாழ்க்கையும் தற்போது நன்றாக உள்ளது. அப்படி விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலட்சுமி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரும்போது நாட்டுப்புற பாடல்களை மட்டுமே பாடினர். அதன் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்கள்.வெறும் குறிப்பாக அதில் செந்தில் பாடும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பை கொடுக்கும். எப்போதும் பல நிகழ்ச்சிகளில் இவர்கள் விஜய் டிவியில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் ராஜலட்சுமி பல சினிமா பாடல்களையும் பாடி வருகிறார். சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் செந்தில் மற்றும் ராஜலட்சுமி அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் அண்மையில் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் காதணி விழா நடைபெற்ற நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது இவர்கள் ஒரு பிரம்மாண்டமான புதிய வீட்டை கட்டியுள்ளனர். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு சூப்பர் சிங்கர் இயக்குனர் ரூபா அவர்களை அழைத்து வீட்டின் திறப்பு விழாவை நடத்தினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://youtu.be/In9DrnN_dKg