“படு சுட்டியான மகன், செம க்யூட்டான மகள்”…. சமீரா ரெட்டி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்…. இணையத்தில் படு வைரல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சமீரா ரெட்டி. பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி.

அதற்கு முன்பு வரை பாலிவுட்டில் கலக்கி வந்த இவர் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எந்த படங்களும் அந்த அளவிற்கு ரிச் கொடுக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நடிகர் அஜித்துடன் நடித்த அசல் திரைப்படம் உட்பட எந்த படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னால் மற்ற நடிகைகளை போலவே இவரும் சினிமாவை ஓரம் கட்டி விட்டு இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இதனிடையே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி அடிக்கடி தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம் .

தற்போது தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டு உடனடியில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.