BIGGBOSS வீட்டுக்குள் மோதல் Start…. கதறி அழுத பிரபல நடிகை….. என்ன நடந்தது தெரியுமா….???

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும். இதை அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இந்நிலையில் போட்டியாளர்களுக்கு தற்போது புதிய டாஸ் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் மற்ற ஒரு சில போட்டியாளர்களுடன் பழகிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்,அப்படி நீங்கள் பழக வேண்டும் என்று நினைக்கும் நபரை தேர்ந்தெடுத்து நீங்கள் ஏன் அவருடன் பழக வேண்டும் என்பதை சொல்ல வேண்டும் என்ற பிக் பாஸ் கொடுத்துள்ளது.அப்போது டாஸ்கேல் கலந்து கொண்ட அசல் கோலார், ஆயிஷாவை அழைத்து பேசியுள்ளார். அப்போது ஆயிஷா சொல்லுடா என ஜாலியாக கூறியுள்ளார்.

இதனைக் கேட்டதும் என்ன வாடா போடா என்று கூப்பிடாதீங்க என அசல் கூறிவிட்டார். அதன் பிறகு சரி சொல்லுங்க என ஆயிஷா கூறி வாங்க போங்க என கூப்பிட்டுள்ளார். இதனால் மனம் வந்த ஆயிஷா டாஸ்க் முடிந்தவுடன் தனியாக சென்று அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக பேசி சமாதானம் செய்யப்பட்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.