நடிகை ரம்பாவுக்கு சொந்தமா சென்னையில் இப்படி ஒரு தொழிலா?…. இன்ஸ்ட்டாவில் அவரே வெளியிட்ட Photos…..!!!!

இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் கணவர் இந்திரகுமார் கனடாவை சேர்ந்தவர் என்றாலும் தற்போது சென்னையில் கிச்சன் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் ரம்பா தனது குடும்பத்துடன் அந்த தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக வருகின்றன.