சென்னையில் நடைபெற்ற திரைப்பட சூட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை மிஸ்ரா வந்திருந்தார். அவர் சமீபத்தில் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் மெகாந்தியுடன் நடித்தார். பின்னர் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக இருவரும் ஒப்பந்தமாக இருந்தனர். அதற்கான சூட்டிங் சென்னையில் நடைபெற இருந்ததால் நேற்று காலை நடிகை மிஸ்ராவும் நடிகர் மெஹாந்தியும் ஒரே காரில் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர் .
அப்போது நடுரோட்டில் அவர்களின் காரை நடிகர் மெஹாந்தியின் மனைவி திருப்தி வழிமறித்தார். பின்னர் காரின் கதவை திறந்து இருவரையும் அடித்து உதைத்தார். அதுமட்டுமல்லாமல் நடிகை மிஸ்ராவின் தலைமுடியைப் பிடித்து காரில் இருந்து வெளியில் இழுத்தார்.
அவரின் அடியில் இருந்து தப்பிக்க முயன்ற மிஸ்ராவை ரோட்டில் வைத்து பலமாக அடித்து உதைத்தார். அப்போது மிஸ்ரா ஆட்டோவை நோக்கி ஓடினார். அவரை விரட்டிச் சென்று திருப்தி தாக்க முயன்ற போது நடிகை மிஸ்ரா ஆட்டோவில் ஏறி தப்பித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Whatever the cause, the victim is being beaten by a lady while screaming for aid. These unshameful bystanders are happily recording videos.#PrakrutiMishraBeatenByBabusanWife #PrakrutiMishra#Babusan pic.twitter.com/pAAOhPu13f
— SUBHRANSU PANDA (@AuthorSubhransu) July 23, 2022