தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது. தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே சிவகுமாருக்கு மகன்கள் மட்டுமல்லாமல் பிருந்தா என்ற ஒரு மகளும் உள்ளார். சூர்யா மற்றும் கார்த்திக் இருவருக்கும் சகோதரி தான் இவர். சிவக்குமார் தனது மகளை சினிமாத்துறைக்கு கொண்டு வரவில்லை. அதனால் பிருந்தா படிப்பு மற்றும் குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். இவர் தற்போது தனது முயற்சியால் பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து வந்துள்ளார்.
அப்படி இவர் எடுத்த முயற்சிகளும் பலம் கிடைக்காத நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திர மௌலி திரைப்படத்தில் பாடல் பாடியுள்ளார். அடுத்தடுத்து என இதுவரை ஐந்து படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.அண்மையின் தமிழில் வெளியான பிரம்மாஸ்திரா என்ற திரைப்படத்தில் நாயகி ஆலியா பட்-க்கு டப்பிங் கொடுத்தவர் இவர்தான். தற்போது சினிமாவில் பாடகீழாக டப்பிங் கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இவர் கிரானைட் தொழில் செய்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.தற்போது இவர்களின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.