எனக்கு இதுதான் ரொம்ப பிடிக்கும்…. கணவர் மறைவுக்கு பின் பல வருட ரகசியத்தை போட்டுடைத்த மீனா…. அப்படி என்ன சொன்னார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு கணவர் உயிரிழந்த துக்கத்திலிருந்து மீண்டு வர மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள மீனா தனது தோழிகளுடனும் மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் பல வருடங்கள் உண்மை ஒன்றை மீனா வெளிப்படையாக கூறியுள்ளார்.அதாவது இத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பேன் என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

நான் சினிமா பின்னணி உள்ள குடும்பத்தை சேர்ந்தவள் கிடையாது. நான் சினிமாவை ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் என் அம்மா தான். எனக்கு கிளாமர் ரோடில் நடிப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு குடும்ப கதாபாத்திரம் தான் அதிக அளவு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் அனைவரும் தாவணி மற்றும் சேலை உடைகளை தான் தருவார்கள்.அப்படி இருக்கும் போது கிளாமர் நடிகைகளை பார்த்தாலே எனக்கு கோபமாக வரும் என்று நடிகை மீனா வெளிப்படையாக கூறியுள்ளார்.