“விவாகரத்துக்கு பின் என் மகன்”…. நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து குறித்து உண்மையை கூறிய நாகர்ஜுனா…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ  சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சமந்தா சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் ஐந்து கோடி அளவில் உயர்த்தி உள்ளார்.இவரைப் போலவே விவாகரத்திற்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா நடிகையுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வதந்திகள் இணையத்தில் பரவியது. இந்நிலையில் சமந்தாவுடன் விவாகரத்திற்கு பின்னர் தன் மகன் நாக சைதன்யா எப்படி இருக்கிறார் என்பது குறித்து பிரபல பாலிவுட் நாளிதழுக்கு நாகார்ஜுனா பேட்டியளித்தார்.

அதாவது,நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிந்தது ஒரு துரதிஷ்டமான விஷயம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அது முடிந்து எங்களது வாழ்க்கையை விட்டு விலகி விட்டது. விவாகரத்தின் போது அவர்களுடன் நாங்கள் இல்லை. ஆனால் என் மகன் நாக சைதன்யா தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறான். என் சந்தோசமே அவரது மகிழ்ச்சி தான் என்றும் அதுவே எனக்கு போதும் எனவும் நாகார்ஜுனா கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.