திடீரென மலர்ந்த காதல்…. நடிகை சமந்தாவிற்கு இரண்டாம் திருமணம்?…. மாப்பிள்ளை ரெடி….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில தகவல்கள் வெளியாகிறது. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இதனிடையே தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது பேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு இந்த காதல் மலர்ந்ததாகவும் அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது.இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.