95வது ஆஸ்கார் விருதுக்கு தேர்வான இந்திய திரைப்படம்…. அதுவும் எந்த படம் தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

உயரிய விருதான 95வது ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று தென்னிந்திய திரைப்பட சம்மையாளனத்தில் நடைபெற்றது.அதில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் கலந்து கொண்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படத்தினை அறிவித்தனர்.

இந்தியா சார்பில் கிட்டத்தட்ட வருடத்திற்கு ஐந்தாயிரம் படங்கள் எடுக்கப்படுகின்றன. மிகச்சிறந்த கதை படைப்புகள் இந்த காலத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. 1929 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது விழா தொடங்கப்பட்டது. அன்று நிராகரிக்கப்பட்ட படங்கள் தற்போது ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்தும் தரமான படங்கள் அனுப்பப்படுகிறது.

இந் நிலையில் ஆஸ்கார் விருதுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில் பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசளிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் செலோ ஷோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கார் விழாவிற்கு இந்த திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் இந்திய மரபையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்தியுள்ளதால் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்னை தொடர்ந்து படக்குழுவினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.