தமிழ் நடிகர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டாரா? – இணையத்தில் பரவிய தகவலால் கதிகலங்கிப் போன பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் நடிக்க, பிற மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகையர் அதிகளவில் வருகின்றனர். ஏனென்றால் தென்னிந்திய தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம், அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பிரபலமாக ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் இன்னும் ஹீரோயின்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகமாக எடுக்கப்படுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். மற்ற மொழிகளில் நடனம், கவர்ச்சி காட்சிகளுக்காகவே கதாநாயகிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.அதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழி நடிகையர் பலர், தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி கன்னட மொழி படங்களில் நடித்து தமிழ் படங்களில் அறிமுகமானவர்தான் நித்யாமேனன். இவருக்கு மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற படம் நல்ல அறிமுகத்தை தந்தது. இதில் இவருக்கு ஜோடியாக துல்கர் சல்மான் நடித்திருந்தார், தொடர்ந்து பிகில், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.இந்நிலையில், தமிழ் படம் ஒன்றில் நித்யாமேனன் நடித்த போது, ஒரு நடிகரால் துன்புறுத்தப்பட்டதாக தகவல் இணையத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு படவிழாவில் கலந்துகொண்ட நித்யாமேனன், தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், தமிழ் படத்தில் நடித்த போது ஒரு நடிகர் என்னை துன்புறுத்தியதாக அவர் கூறியதாக, தகவல் பரவி இருந்தது. இதுபற்றி அவரிடம் சிலர் கேட்ட போதுதான் அப்படியே ஒரு விஷயமே அவருக்கு தெரிந்திருக்கிறது. எந்த விழாவிலும் நான் அப்படி பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதன்பிறகுதான், சிலர் தவறாக கிளப்பிவிட்ட வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.