கையில் இரட்டை குழந்தைகளுடன் போட்டோ ஷூட் நடத்திய நமீதா…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நமீதா. தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர். இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து இவர் சற்று விலகி இருந்தாலும் இன்றளவும் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்த நமிதா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். தமிழில் இவர் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றியை தந்தாலும் சில படங்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தனர்.

இதனிடையே திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி அண்மையில் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

அண்மையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நமீதா தனது குழந்தைகளுடன் நடத்திய போட்டோ சூட் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.