நடுராத்திரி கதவ தட்டுன பிரபுதேவா…. கூட யார் வந்தாங்க தெரியுமா?…. உண்மையை போட்டுடைத்த ஜெயந்தி கண்ணப்பன்….!!!!

தென்னிந்திய சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவரின் நடனத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் மற்றொரு பக்கம் இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. அந்த அளவிற்கு நடிப்பின் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இப்படி பல்வேறு புகழுக்குரிய பிரபுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ராம் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தநாள். இதனிடையே பிரபுதேவா மற்றும் நடிகை நயன்தாரா இடையே திடீரென காதல் மலர்ந்தது. இதனால் பிரபுதேவாவின் முதல் மனைவி போலீசில் புகார் அளிக்க சென்ற நிலையில் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து நயன்தாராவின் காதலும் முறிந்து போனது. அதன் பிறகு பிரபுதேவா தனியாக வாழ்ந்து வருகிறார்.ஆனால் நயன்தாரா விக்னேஷ் இவரை திருமணம் செய்து கொண்டு தற்போது மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே பிரபுதேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது

.இந்நிலையில் பிரபுதேவாவிற்கு பீகார் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கும் தகவலை பேட்டி ஒன்றில் ஜெயந்தி கண்ணப்பன் கூறி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருபவர் தான் ஜெயந்தி கண்ணப்பன்.இவர் பிரபுதேவா திருமணம் குறித்து பேசி உள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.