“என் வாழ்வில் மறக்க முடியாத நாள்”…. தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல்…. என்ன காரணம் தெரியுமா…????

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் காஜல் பசுபதி. அதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு மற்றும் இரும்பு குதிரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காலம் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

இருவரின் விவாகரத்திற்கு பிறகு சாண்டி வேறொரு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகளும் இருக்கின்றனர். ஆனால் சாண்டியை திரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் விவாகரத்திற்கு பின்னரும் சாண்டி மற்றும் அவரின் குடும்பத்துடன் நல்ல தோழியாக இருந்து வருகிறார்.

மேலும் சாண்டியை பிரிந்தாலும் இன்னும் அவர் நினைவாக கையில் போட்ட டேட்டுவை மட்டும் நீக்காமல் அப்படியே உள்ளார் காஜல் பசுபதி. அவருடன் எடுத்த புகைப்படங்களை அவ்வபோது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.இந்நிலையில் இன்று காஜல் தனது தந்தையின் நினைவு நாளில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.