மாமனாரை மட்டும் புகழ்ந்து…. ஒரு தடவை கூட கணவர் பற்றி பேசாத பிரியங்கா…. என்னதான் காரணம்….????

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட்களும் வந்தன.இவர் எப்போதுமே பல நிகழ்ச்சிகளில் அம்மா மற்றும் தம்பி பற்றி பேசும்போது உடனே அழுது விடுவார்.

இதனிடையே பிரியங்கா ஒரு தடவை கூட தனது திருமண பேச்சையோ அல்லது தனது கணவர் பற்றியோ இதுவரை எதுவும் பேசியது கிடையாது. அப்படி அவரின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என்று ரசிகர்களுக்கு பல வருடங்களாகவே கேள்வி நீடித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை மேலும் தூண்டும் வகையில் பிரியங்கா பல பதிவுகளை போட்டு வருகிறார்.

அதாவது தனது தம்பி மற்றும் அம்மா தான் எனக்கு உலகமே என்று அவர் கூறியுள்ளார். அவரின் தம்பிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரியங்கா, மகன், கணவன், அப்பா என எங்களுக்கு எல்லாமே நீ மட்டும் தான் எனக் கூறி பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடைபெற்ற அவார்ட் நிகழ்ச்சியில் தனது மாமனார் தான் கால் அமுக்கி  விடுவார் என்று வார்த்தையை கூறி பிரியங்கா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.