மாதம் 2 லட்சம் வரை சம்பளத்தில்…. தமிழக அரசு துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அரசு துறையில் காலியாக உள்ள 25 கணக்கு அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: அரசுத் துறையில் கணக்கு அலுவலர்

காலி பணியிடங்கள்: 25 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது: 32 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், சீர் மரபினர்,முஸ்லிம்கள் மற்றும் விதவைகள் போன்றோருக்கு வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடத் தேர்வுக்கு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்திய இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழறிவு கட்டாயம் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: அக்டோபர் மாதம் 8ஆம் தேதி கணினி வழியில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர் தேர்வு கட்டணமாக 200 மற்றும் பதிவு கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.

சம்பளம்: இந்த பணிக்கு ரூ.56,900 – ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: விருப்பமுள்ளோர் www.tnpscexams.inஎன்ற இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in அல்லது grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.