பாம்புகள் நிறைந்த கிணற்றுக்குள் நடிகையை இறக்கி விட்டாரா இயக்குநர் – முதல் படத்திலேயே இப்படி ஒரு சோதனையா?

தமிழ் சினிமாவில், புன்னகை அரசியாக முதலில் அழைக்கப்பட்டவர் கேஆர் விஜயா. அவரை தொடர்ந்து, நடிகை சினேகாவின் அழகான சிரிப்பு, அதே பட்டப் பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் சிநேகா. நடிகர் பிரசன்னாவை, கடந்த 2012ம் ஆண்டில் சிநேகா, காதல் திருமணம் செய்துகொண்டார். இப்போது 2 பிள்ளைகளின் தாயாக இருக்கிறார். படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில், நடிகை சிநேகா முதல் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். சுசி கணேசன் இயக்கத்தில், சிநேகா அறிமுகமான முதல் படம் விரும்புகிறேன். இதில் நடிகர் பிரசாந்த் ஜோடியாக, சிநேகா நடித்திருப்பார். ஈஸ்வரி ராவ், நாசர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தில், தீயணைப்பு வீரராக நடிகர் பிரசாந்த் கேரக்டர் இருந்தது.இந்த படத்தில் நடித்த போது, பாம்புகள் நிறைந்த ஒரு கிணற்றுக்குள், இயக்குநர் என்னை இறக்கி விட்டுவிட்டார் என புகார் கூறினார். இதுகுறித்த இயக்குநர் சுசி கணேசன், அந்த கிணற்றுக்குள் பாம்புகள் இல்லை. லைட்மேன்கள் உடன் இருந்தும், சிநேகா அச்சம் காரணமாக நடிக்க மறுத்துவிட்டார்.படத்தின் கதைக்கு அந்த காட்சி மிக முக்கியமானதாக இருந்தது எனவும் கூறியிருந்தார். ஆனால், விரும்புகிறேன் படம், சிநேகாவுக்கு அறிமுக படமாக நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பின்புதான் கமல், விஜய், அஜீத், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.