“அவ என் மகளே இல்ல”…. கொந்தளித்த ராஜ்கிரன்….. காலில் விழுந்து கதறி அழுத தம்பதி…. ஒன்று சேருமா குடும்பம்….?????

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் ராஜ்கிரண். இவரின் மகள் தந்தையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் நேற்று வெளியானது. அதாவது ராஜ்கிரன் மகள் ஜீனர் நாதஸ்வரம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முனீஸ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரனுக்கு இதில் விருப்பம் இல்லாத காரணத்தால் முனீஸ் ராஜா தனது குடும்பத்தினர் முன்னிலையில் ஜீனத்தை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் என் மகள் இல்லை, என்னுடைய வளர்ப்பு மகள் தான் என ராஜ்கிரன் விளக்கம் அளித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் அவரை காதல் திருமணம் செய்த சீரியல் நடிகர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் இதை செய்திருக்கிறார் எனவும் அவரை எப்போதும் என் மருமகனாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் ராஜ்கிரன் ஆவேசமாக பேசியிருந்தார்.

மேலும் முகநூல் மூலமாக அவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்ட சீரியல் நடிகர்,என்னென்ன முறையிலோ அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இது குறித்த செய்தி என் காதுக்கும் வந்தது, அது குறித்து நான் விசாரிக்க தொடங்கியதில் அவர் மகா மட்ட ரகமான புத்தியும் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என ராஜ்கிரன் கூறினார்.

நான் எப்போதுமே அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனவும் ராஜ்கிரன் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த தம்பதியினர் தற்போது ராஜ்கிரனின் மனைவியை சந்தித்து அவரிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். அதாவது எப்படியாவது அப்பாவை சமாதானப்படுத்தி ஏற்றுக் கொள்ள வேண்டி அவரிடம் கெஞ்சி உள்ளனர். இதற்காக அவர்கள் காலில் விழுந்து கதறியதாகவும் கூறப்படுகிறது.எனவே மனைவியின் பேச்சைக் கேட்டு அவர்களை ராஜ்கிரன் ஏற்றுக்கொள்வாரா என்று பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.