ஸ்டார்ட் ஆச்சி மகாலட்சுமிக்கு மாமியார் கொடுமை?…. ஒரே வாரத்தில் மாறிய ரவீந்தர்…. அதுவும் இப்படியா….????

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர்  இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள்.இதனிடையே இருவரும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.அண்மையில் இருவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மகாலட்சுமி சூட்டிங் இருக்கிறது என்று சொல்லிவிட்டு காலையிலேயே கிளம்பிவிட்டார்.

அவருக்கு புரட்டாசி ஸ்பெஷல் ஆக வெஜிடேரியன் சாப்பாடு செய்து கொண்டு சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றேன் என்று கூறிய அவர், சண்டே family time என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக வேறு விதமாக இருக்கிறது.அன்பே வா சூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்துச் செல்லும் டன்சோ டெலிவரி பாய் ஆகிவிட்டேன் என்று கூறி அவர் ஒரு பதிவை போட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.