40 நாட்கள் மகளுடன் நியூயார்க்கில் இருந்த சூர்யா…. எதற்காக சென்றார் தெரியுமா?…. தீயாய் பரவும் செய்தி….!!!

நடிகர் சூர்யா -ஜோதிகா ஜோடி தங்களுடைய படங்களில் அசத்தி வந்தால், அவர்களுடைய மகள் தியா நடிப்பில் அசத்தியுள்ளார்.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தியா மொத்தம் 487 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியது. அவர் தமிழ்-95, ஆங்கிலம்-99, கணிதம்- 100, அறிவியல்-98, சமூக அறிவியல்- 95 மதிப்பெண்கள் எடுத்து ள்ளதாக சூர்யாவின் நெருங்கிய உறவினர்கள் கூறியுள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் மகள் உயர்கல்விக்காக நியூயார்க்குச் சென்றுள்ளதாக விருமன் படை இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கூறியுள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, சூரரைப் போற்று திரைப்படத்திற்காக எனக்கு தேசிய விருது வழங்கப்பட்ட போது அதை நான் உணரவே சில மணி நேரங்கள் ஆனது. தேசிய விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் நான் என் மகளுடன் அவரின் உயர்கல்விக்காக நியூயார்க்கில் இருந்தேன்.

கிட்டத்தட்ட 40 நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன் என்று கூறினார். சூர்யா இவ்வாறு கூறியதில் இருந்து அவரது மகள் தியா நியூயார்க்கில் படிக்கவிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மட்டும் திரையுலர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.