மொக்க படம் கொடுத்த இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பளித்த நடிகர் விஜய் சேதுபதி – என்னாச்சுங்க இவருக்கு?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல் நடித்த விக்ரம் படத்திலும், வில்லன் கேரக்டரில் நடித்தவர் விஜய் சேதுபதி. இப்போது அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும், இவர்தான் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன், சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் என்ற படத்திலும், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி என்ற படத்தில், போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார், இதில் மாமனிதன் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், படம் நல்ல முறையில் விமர்சிக்கப்பட்டது. விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருந்தார் என ரசிகர்கள் பாராட்டினர். ஆனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப்படங்களை தந்த பொன்ராம் இயக்கிய டிஎஸ்பி படம், கடுமையாக விமர்சிக்கப்பட்டது.இந்நிலையில், நடிகர் சூரியை அணுகி டைரக்டர் பொன்ராம், படம் இயக்க வாய்ப்பு கேட்ட நிலையில், அவர் தேதியில்லை என மறுத்திருக்கிறார். இதையடுத்து மீண்டும் நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்த இயக்குநர் பொன்ராம், மீண்டும் என் இயக்கத்தில் ஒரு படம் பண்ணுங்கள் என அழைத்துள்ளார். அவரும் உடனே சம்மதமும் தெரிவித்து விட்டார்.டிஎஸ்பி படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகும், பொன்ராமுக்கு மீண்டும் விஜய் சேதுபதி படம் தந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த படத்தில் டைரக்சன் பொறுப்பு மட்டும்தான், பொன்ராம் வசம் உள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் இயக்குநர் வெற்றிமாறன்தான். அதனால்தான், இந்த படத்தில் நடிப்பதாக உடனே சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி.