உங்க கூட நாங்க இருக்கோம் சார் – மகளுடன் நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் சொன்ன இயக்குநர்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. நல்ல வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டு வருகிறார். நான், திமிரு பிடிச்சவன், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல படங்கள், ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றன. கடந்த வாரத்தில், விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, தற்கொலை செய்து கொண்டார். 16 வயதான, பிளஸ் 2 மாணவியான அவரது தற்கொலையால், விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பம் அதிர்ந்து போனது. தமிழ் சினிமா சார்ந்தவர்களுக்கும் இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மூத்த மகள் மீராவின் மறைவுக்கு பிறகு, நேற்று முதன்முறையாக விஜய் ஆண்டனி, தனது இளையமகள் லாராவுடன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் என்ற படத்தின் பிரஸ் மீட்டில், தனது மகளுடன் அவர் கலந்துகொண்டார். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் என பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் ஆண்டனி மட்டுமின்றி, மற்றவர்களும் சோகமான மனநிலையில் தான் காணப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு நன்றி சொன்னார். சிறந்த படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் அமுதன், சந்தோஷமாக நடக்க இந்த நிகழ்ச்சி, அப்படி நடக்கவில்லை. என் அப்பா இறந்த போது, விஜய் ஆண்டனி வந்திருந்தார். எனக்கு ஆறுதல் கூறினார். அந்த வார்த்தைகளையே இப்போது நானும் கூறுகிறேன், உங்க கூட நாங்க இருக்கோம் சார், என்பதுதான் என்றார்.