அமைச்சர் என்ற அதிகார பந்தாவால், அந்த விஷயத்தை அலட்சியப்படுத்தினாரா – கடுமையான விமர்சனத்தில் சிக்கிய பூ நடிகை

சினிமாவில் நடித்து, மக்கள் மத்தியில் புகழ் பெறும் நடிகர், நடிகையரில் ஒரு சிலர் அரசியலில் குதித்து விடுகின்றனர். சினிமா புகழ் தந்த வெளிச்சம் காரணமாக, அவர்களுக்கு கட்சிகளில் முக்கிய பதவிகள் தரப்பட்டு, தேர்தல் நேரங்களில், தொகுதியும் ஒதுக்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறும் அவர்களுக்கு சுலபமாக அமைச்சர் பதவியும் கிடைத்து விடுகிறது. அப்படி ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக வலம் வருபவர்தான் நடிகை ரோஜா.

தமிழில், செம்பருத்தி என்ற படம் மூலம், இயக்குநர் ஆர்கே செல்வமணி,ரோஜாவை அறிமுகம் செய்தார். இந்த படத்தில், பிரசாந்த் ஜோடியாக, ரோஜா இளம் நாயகியாக நடித்தார். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபுதேவா, கார்த்திக், பிரபு போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையாக மாறினார்.

இயக்குநர் ஆர்கே செல்வமணியை காதலித்து மணம் செய்த இவர், இப்போது தனது சொந்த மாநிலமான ஆந்திராவில், ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியில், ஆளுங்கட்சி அமைச்சராக இருக்கிறார். சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ரோஜா, காலணிகளை கழட்டி விட்டுவிட்டு நடந்துள்ளார். அப்போது, அவருடன் வந்த அதிகாரி ஒருவர், அந்த காலணிகளை கையில் எடுத்துக்கொண்டு ரோஜாவை பின்தொடர்ந்து செல்கிறார்.

இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி, ரோஜாவை சகட்டு மேனிக்கு பலரும் திட்டி தீர்க்கின்றனர். அமைச்சர் என்ற அதிகாரத்தில், நடிகை என்ற பந்தாவால் தான் இந்த செயலலை ரோஜா தடுக்காமல், அலட்சியமாக நடந்துகொண்டதாக பலரும் விமர்சித்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.