நடிகர் பிரசாந்த் மீது பொய் புகார் அளித்த பெண்…. பிரசாந்தின் தந்தை வெளியிட்ட பரபரப்பு வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் பிரசாந்த். தமிழில் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் ஜோடி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். அவரின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் அந்தகன்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு வந்திருந்த அந்த பெண் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகாரை வாய் வழியாக அளித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வந்த அந்த பெண்ணுடன் நட்பு கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் மேலும் சில புகார்களையும் அவர் முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேண்டுமென்றே தேரை கெடுக்க செய்யும் சதி என்று பிரசாந்த் தரப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பிரசாந்தின் தந்தை ஒரு வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரசாந்த் மீது பொய்யாக புகார் அளித்த அந்தப் பெண் சில வருடங்களுக்கு முன்பு பிரசாந்தை நேரில் பார்க்க வேண்டும் என கூறி பிரச்சனை செய்ததாகவும் தற்போது மீண்டும் அலுவலகத்திற்கு வந்த அந்த பெண் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து கத்தி கூச்சலிட்டதாகவும் கூறி அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.