இவருக்கா இந்த நிலைமை?…. உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகர்…. பார்த்ததும் கண் கலங்கிய மோகன்லால்…..!!!

மலையாள திரை உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தவர் பிரபல நடிகர் சீனிவாசன். ஹீரோவாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதாசிரியர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக  வளம் வருகிறார்.

இவருக்கு வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தனது தந்தையைப் போல மலையாள திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகர்களாக கலக்கி வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதை இவர் குறைத்துக் கொண்டார் நடிகர் சீனிவாசன்.

அதற்கு காரணம் என்னவென்றால் இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் பரிதாப நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மனதை கலங்கடித்தது. நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் உடல் நல குறைவு காரணமாக உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் மாறி உள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த ஸ்ரீனிவாசனை கண்டதும் அவரின் உடல் நிலையை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அவரைக் கண்டவுடன் பல படங்களில் அவருடன் ஒன்றாக இணைந்து நடித்த நெருங்கிய நண்பரான மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியுடன் அவரை அன்பாக வரவேற்றனர். பின்பு உடல்நலம் குறைவு காரணமாக மெலிந்த தோற்றம் கொண்ட அவரைப் பார்த்து கண்கலங்கிய மோகன்லால் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் சீனிவாசனுடன் மோகன்லால் கட்டியணைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.