பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதன் பிறகு அதிகாரபூர்வமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார்.

இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு சீரியல் நடித்து வரும் மகாலட்சுமி நள்ளிரவில் கணவருடன் காரில் பிரியாணி சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புரட்டாசி மாதமாக இருந்து வந்ததால் அசைவ உணவை சாப்பிடாமல் இருந்துள்ளனர்.தற்போது புரட்டாசிக்கு பிறகு மிட்நைட் பிரியாணி சிறந்த உணர்வாக இருக்கிறது என்றும் நான் செய்யும் அனைத்து அநியாயங்களுக்கும் என்னுடன் சேர்ந்ததற்கு நன்றி என ரவிந்தரின் இன்ஸ்டாகை குறிப்பிட்டு மகாலட்சுமி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.