எனக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை?…. மனம் திறந்த பாடகர் எஸ்.பி.பி சரண்…. அவருக்கு இப்படி ஒரு சோகமா….????

இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் பாடகர்களில் ஒருவர்தான் எஸ்.பி பாலசுப்ரமணியன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் சரண் சினிமாவில் பாடுவது, படங்கள் தயாரிப்பது மற்றும் நடிப்பது போன்ற பல வேலைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், நான் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல் பாடியிருக்கிறேன். ஒரு காலத்தில் என்னை தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் பாடிய பாடல்களை எல்லாம் ரசிகர்கள் ஹிட் கொடுத்தார்கள். ஆனால் இப்போது வாய்ப்புகள் எதுவும் சரியாக வருவதில்லை.

அது ஏன் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. என்னால் பாட முடியாது என்று எப்போதும் நான் கூறியது இல்லை. ஏதாவது ஒரு அழைப்பு வந்தால் உடனே அங்கு சென்று விடுவேன். இருந்தாலும் தற்போது எனக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் தமிழில் ஒரு படம் தயாரித்து வருவதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.