தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ஒரு சில நடிகர்கள் மக்கள் மனதில் நிலைத்து வருகிறார்கள். அதற்க்கு கரணம் பல கூறலாம். அப்படி இருக்கும் ஒரு சில நடிகைகளில் நடிகை குஷ்பூ அவர்களும் ஒருவர் என்பதில் மாற்றமும் இல்லை. தன அழகிய முக பாவனையில் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை குஷ்பூ. இந்நிலையில்,திருமண நாளில் காதல் வாழ்க்கை பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் உ ருக்கமாக பதிவு செய்துள்ளார்.

அ வர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாவது, “இந்த 20 ஆண்டுகளில் எதுவுமே மாறவில்லை. இதுநாள் வரையில் நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். ஒரு புன்னகையுடன் அதை நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். தன்னுடைய திருமணத்துக்கே தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான். ஆனால் நீங்கள் அப்படித் தானே. என்னைத் தா ங்கும் தூணுக்கு திருமண நாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சுந்தர்.சி – குஷ்பு தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த 1995ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘முறைமாமன்’ திரைப்படத்தில் குஷ்பு நாயகியாக நடித்தபோதே சுந்தர்சியுடன் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரின் காதலும் திருமணத்தில் இணைந்தது.
Nothing has changed over these 20yrs..till date i do the talking and you just listen to me with a smile. ???? And probably you are the only groom who came late for his own wedding ????But then that’s you..??? Happy anniversary my pillar of strength.❤❤❤❤❤❤ pic.twitter.com/EcZf2jQdLI
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 9, 2020