என் அப்பாவால் நான் அதை இழந்தேன், ஆனால், என் மகள் அதை இழக்க கூடாது”..!- பிரபல நடிகர் அதிரடி பேட்டி…!

தற்போது அனைத்து திரையுலக பிரபலங்களும் மற்றும் அனைத்து மக்களும் தங்களது குடும்பத்துடன் தற்போது அ திக அளவில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து முண்ணணி தமிழ் நடிகரான நடிகர் கார்த்தி தற்போது சமுகவலைதள பகுதியில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.


அதில் அவர் கூறியதாவது அதாவது நான் சிறு வயதில் இருக்கும் போது என்னுடைய அப்பா ஷூ ட்டிங்குக்கு சென்று விடுவார். அதனால் அவருடன் என்னால் பேச இயலாது அவருடன் நேரத்தை செலவிட முடியாமல் பல நாட்கள் போனது.மேலும் இது குறித்து நான் பல நாட்கள் ஏங்கி உள்ளேன்.என் மகளுக்கும் அதுபோன்று நடக்கக்கூடாது என்பதால் தற்போது அவளுடன் என்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறேன் என கூறியுள்ளார்


தொடர்ந்து மேலும் தற்போது குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம் பேசுகிறோம் பழகுகிறோம் எனவும் அவர் தற்போது அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் நம் தமிழ் சினிமாவில் விரைவில் பல திரைப்படங்கள் வெ ளிவர கா த்து இருக்கின்றன.