பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து வருபவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். இவர் கடைசியாக “என்கிட்ட மோதாதே” என்ற ஷோவை தொகுத்து வழங்கினார்.
கடந்த 15 வருடத்திற்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவர்தான் அதிக ஷோக்களை தொகுத்து வழங்கிய தமிழ் தொகுப்பாளினி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

குறிப்பாக சின்னத்திரை தொகுப்பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.சிறுவயதிலேயே தொகுப்பாளராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தற்போது நடுவராகவும், பெரிய திரைகளில் நடிகையாகவும் தலைகாட்டி வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் அவர் வந்த நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துளளார்.இதில் ரசிகர்கள் பல்வேறு விதமான வித்தியாச வித்தியாசமான கேள்விகளை கேட்க அதற்கு பதில் கொடுத்து அசத்தியுள்ளார்.மேலும் தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.