நடிகை வேதிகா, மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை வேதிகா. இவர் தமிழில் முனி, காளை, பரதேசி காவியத்தலைவன், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

பரதேசி படத்தில் இவர் நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் மாலத்தீவில் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார் அம்மணி. அங்கு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இன்று அவர் கடற்கரை மணலில்அமர்ந்தவாறு முதுகு முழுதும் மணலை பூசிக்கொண்டு இருக்கும் புகைப்ப்டத்தை வெ ளியிட்டு, ” இந்த உலகின் ஒவ்வொரு மண் துகளிலும் பூமியின் வரலாறு உள்ளது ” என கூறியுள்ளார்.