சாப்பிடக் கூட பணமில்லாமல் கஷ்ட்டப்பட்ட பிரபல நடிகர்..!! வாழ்வில் இப்படி ஒரு சோகமா..?? பலரையும் உருக வைத்த கதை..!!

தமிழ் சினிமாவில் நாம் பல நடிகர் நடிகைகள் பார்த்துள்ளோம். அதில் ஒரு சிலரை நாம் மறக்க முடியாத அளவுக்கு திறமை வாய்ந்த நபர்கள் இன்றும் நம் மனதில் உள்ளார்கள்.  தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட மிகச்சிலரில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என ஜொலித்து வருகிறார். கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவர் எழுதிய கிறுக்கல்கள், கவிதைத்தொகுப்பு, கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தின் இயக்கம் ஆகிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விழா கோவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் சிங்கிள் ஷாட்டில் இரவில் நிழல் படத்தை இயக்குகிறேன். விஜய் சேதுபதியுடன் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளேன். புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் வெப் சீரிஸில் நடிக்கிறேன்.

வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் 3 நாட்கள் கூட சாப்பிடாமல் வேலை செய்திருக்கிறேன். சபரிமலைக்கு போகவும், சாப்பிடவும் கூட காசில்லாமல் 75 நாட்கள் விரதமிருந்து அதன் பின்னர் சென்றேன் என கூறியது பலரையும் மனம் உ றைய வைத்தது.