எனது நல்ல காரியங்களை, இனி என் மகளே துவங்கி வைப்பாள் – மறைந்த மகளுக்காக விஜய் ஆண்டனி எழுதிய கண்ணீர் வரிகள்

தமிழ் சினிமாவில், முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் நடிகராகி திமிரு புடிச்சன், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்தார். நல்ல சிந்தனையாளராக, இவர் நடித்த படங்கள் இவரை அடையாளப்படுத்தியது. சொற்ப எண்ணிக்கையில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில் இருந்தார் விஜய் ஆண்டனி.சில தினங்களுக்கு முன்,.விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். யாருமே நினைத்துக்கூட பார்த்திராத இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் குறிப்பாக, தமிழ் சினிமாத் துறையினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விஜய் ஆண்டனி மீது மிகுந்த அன்பு கொண்ட பலரும், நிலைகுலைந்து போயுள்ள விஜய் ஆண்டனிக்கு நேரில் ஆறுதல் கூறினர். ஒரு தந்தையாக, மகளுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை செய்து முடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கையாக, ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள், அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள்.என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள் அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.
அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் – உங்கள் விஜய் ஆண்டனி என, அந்த கடிதத்தில், அன்பு கொண்ட தந்தையாக,அவர் எழுதிய வாசகங்களை படித்து பலரும், கண்கலங்குகின்றனர்.