
வரும் அக்டோபர் 30ம் தேதி, ‘லியோ’ படம் ரிலீஸ் ஆகிறது. அதைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 58 படம் உருவாகிறது. தந்தை -மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தில், சிநேகா, பிரியங்கா மோகன் ஆகியோர் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு வில்லன் யார் என்ற தகவல் இப்போது வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இப்போதெல்லாம், படத்தின் ஹீரோவை போலவே, வில்லன் நடிகரும் அதிக முக்கியத்துவம் பெற்றவராக இருக்கிறார். அதற்கு, சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தையும், அதில் வில்லன் கேரக்டர் செய்த விநாயகத்தையும் சொல்லலாம்.
விஜய் நடிக்கும் அடுத்த படத்தில், நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களில், வில்லன் கேரக்டரில் அரவி்ந்தசாமி, நடிப்பில் அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விஜய்க்கு வில்லனாக நடிக்கும் அரவிந்த் சாமி, இந்த படத்திலும் பட்டைய கிளப்புவார் என்கின்றனர் ரசிகர்கள்.
இப்போது ஆக்ஷன் படங்கள் என்றாலே, ஹீரோவை காட்டிலும் வேற லெவலில் சம்பவம் செய்யும் வில்லன் கேரக்டர்கள்தான், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அந்த வகையில், அரவிந்த் சாமி, விஜயுடன் மோதும் காட்சிகள், படத்தில் விறுவிறுப்பை கூட்டிவிடும் என்பதால், படம் பயங்கரமாக இருக்கும் போல இருக்கே, என ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிக்கத் துவங்கி விட்டனர்.