நயன் – விக்கி குழந்தையின் வாடகை தாய் இவங்க தான்…. முதல்முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்து ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இருப்பதாக புகைப்படத்துடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார். அதனைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில்,திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும் என பல கேள்விகளும் எழுந்தது. இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக தெரிவித்திருந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக அரசு இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அதற்கான ஆதாரங்கள் விளக்கங்களை விக்னேஷ் மற்றும் நயன் தம்பதியினர் கொடுத்துள்ளனர். என் நிலையில் அந்த வாடகை தாய் யார் என்று கேள்வியும் தற்போது இணையத்தில் உலா வர தொடங்கியுள்ளது. இதற்கான உண்மை புகைப்படமாக தற்போது வெளியாகி உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா பிரபல கோவிலில் சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்த நிலையில் அப்போது வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த பெண்மணியும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடன் இருந்துள்ளார்.திருமணத்திற்கு முன்பே இந்த முடிவை எடுத்து தகுந்த தயாரிப்புடனும் விதிகளுடனும் தான் நயன்தாரா பெற்றுள்ளார் என தெரிகிறது.

அந்தப் பெண் நயன்தாராவின் நெருங்கிய தோழியாக இருந்து இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்து கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.