மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய நாயகன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து இவர் பல மலையாள படங்களில் நடித்தார். இந்நிலையில்தான் கோலி சோடா 2 என்ற தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இந்த படத்தில் இவர் தில்லை என்ற கதாபாத்திரத்தில் வலம் வருவார். இவர் ஏற்கனவே சுனிதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு ஜான் க்ரிஸ் என்ற மகன் உள்ளார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக சென்ற குடும்ப வாழ்க்கை அதைப்பின்னர் கருது வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில், தான் தற்போது நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், மரியம் தாமஸ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளி வந்திருக்கிறது.
இத்தகவலை நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது அவர்களது ரசிகர்களுக்கு என்று தான் சொல்ல வேண்டும்.